Pages

Friday, November 18, 2011

யாழில் இடையூறு விளைப்போர் மீது சட்ட நடவடிக்கை-ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவிப்பு


யாழில் இடையூறு விளைப்போர் மீது சட்ட நடவடிக்கை-ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவிப்பு
[ 2011-11-18 14:59:55 | வாசித்தோர் : 684 ]

பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகச் செயற்படுவேர் இனங்காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுன்னாகம் பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர்.

சுன்னாகம் பொலிசார் இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  சுன்னாகம் பொலிஸ் பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திக்கு சந்தி நின்று இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், வீதியில் செல்லும் பெண்கள், மாணவிகளுடன் சேட்டை செய்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

பொது இடங்களில் இருந்து மதுபானம் அருந்துதல், போதையில் குழப்பங்களை உண்டாக்குதல், அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல், மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!

No comments:

Post a Comment