Pages

Friday, November 18, 2011

ரூபா 6 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளை கடத்தியவர் கைது!!


ரூபா 6 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளை கடத்தியவர் கைது!!
[ 2011-11-18 11:40:57 | வாசித்தோர் : 715 ]

கட்டாரிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த 30 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 153 சிகரட் பெட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலங்கை வந்த விமானத்திலே குறித்த சந்தேக நபர் இந்த சிகரட்டுகளைக் கொண்டு வந்துள்ளார்.

இச்சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி ரூபா 6 இலட்சத்து 12 ஆயிரம் என கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!

No comments:

Post a Comment